புலம்பெயர் தேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டாரில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad