யாழில் 60 பேரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம். கொடிகட்டி பறந்த வியாபாரம்.

 போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் இருவர் கைதாகினார். இதனை அடுத்து மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு, பொலிசார் தகவல் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வந்த தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவர் கைதாகினார்.

இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சிற்றூழியர் ஒருவரும் இன்னொருவருமாக இருவர் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கைதாகினார்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் குறைந்தது 60 பேர் வரையாவது போலி சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.

மாவட்ட செயலகத்தில் நடைபெறும் எழுத்து பரீட்சைக்கு இரண்டு தடவைகள் தோற்றியும், சித்தியடைய முடியாதவர்களை இலக்கு வைத்து மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள முகவர்கள் ஊடாகவே போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவாகரத்துடன் தொடர்புடையவர்களை முழுமையாக கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மேலதிக விசாரணை தொடர்வதற்கும் யாழ் மாவட்ட செயலகத்தினரின் ஒத்துழைப்புடன் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களுடன் விசாரணை முன்னெடுக்கவும் பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

மக்கள் சாரதி பயிற்சி பாடசாலைகள் மூலமாகவோ அல்லது மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஊடாகவோ நேரடியாகவே விண்ணப்பித்து உங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுங்கள். தரகர்கள் வெளி நபர்களை நம்பி உங்கள் பணத்தினை இழந்திடாதீர்கள். போலி சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad