அப்போது திருமணமாகி கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். ஜெய்சங்கர் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை ஜெய்சங்கர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அவரை பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள், ஆவணத்திற்காக பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்தபோது 18 வயது நிரம்பாத சிறுமி என்பது தெரிய வந்தது.
