12 பேருடன் ஒரே நேரத்தில். அதிரவைக்கும் இளம்பெண்ணின் லீலைகள்.

 திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, பாலாஜி நகரைச் சேர்ந்த முனியம்மா, கணவர் தனிகை வேலுவைப் பிரிந்து, மகள் தேவி (24) உடன் வசித்து வந்தார். டிப்ளமோ செவிலியரான தேவி, நோயாளிகளின் வீடுகளில் தங்கி மருத்துவப் பணி செய்து வந்தார்.

கடந்த நான்கு மாதங்களாக வேலையின்றி வீட்டில் இருந்த அவர், சில நாட்களுக்கு முன் மாயமானார். இதனால், தாய் முனியம்மா, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேநேரம், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சாய்ராமும் காணாமல் போனதாக புகார் பதிவானது.காவல்துறை விசாரணையில், தேவியும் சாய்ராமும் உறவினர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் காதலித்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. தேவி, சாய்ராமுக்கு சித்தி முறையில் உறவினர்.

இரு தரப்பினரையும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

விசாரணையில், தேவி கடந்த ஆறு ஆண்டுகளாக தனது தாய்மாமனை காதலித்து வந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததாகவும் தெரியவந்தது. இதற்கிடையே, சோழவரம் அருகே காரனோடையைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர், தேவி தன்னை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து, 5 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளித்தார்.

புகைப்பட ஆதாரங்களுடன் விஜய் புகாரளித்தபோது, அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிப்பட்டது: தேவி, ஒரே நேரத்தில் 12 இளைஞர்களை காதலித்து, அவர்களிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்று ஏமாற்றியிருந்தார். சாய்ராமின் தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

விசாரணையின்போது, தேவி முதலில் சாய்ராமுடன் செல்வதாக தர்ணா செய்தார். ஆனால், தனது மோசடிகள் வெளிவந்ததால் பயந்து, தாயுடன் செல்ல ஒப்புக்கொண்டார். சாய்ராம் கட்டிய தாலியை கழற்றி உறவினர்களிடம் கொடுத்துவிட்டு, தேவி புறப்பட்டார்.

மனமுடைந்த சாய்ராம், தாயின் தோளில் சாய்ந்து கதறி அழுதார். அவரை உறவினர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்த வினோத வழக்கை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர, காவல்துறை பெரும் முயற்சி எடுத்தது. இச்சம்பவம், திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad