பெண் வேடத்தில் மோசடி தொழில் செய்த நபர் : பொலிஸ் வலையில் சிக்கியது எப்படி?

பீகாரில் மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பெண் வேடமிட்டு 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையை ஏமாற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் மோசடி தொழில் செய்து வருபவர் அவினாஷ். இவர் மது கடத்தல் மற்றும் போலி அரசாங்க ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் வரை அனைத்து சமூகவிரோத செயல்களையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பொலிசாரின் பிடியில் சிக்காமல் மர்மமான முறையிலேயே இவரது நடமாட்டம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அவினாஷ் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது மோனிக்கா என்ற பெண் என்பதும் அவினாஷ் அல்ல எனவும் பொலிசாருக்கு அதிர்ச்சியை அளித்தன.

இதனிடையே குறிப்பிட்ட நபரின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட பொலிசாருக்கு 5 போத்தல் மது, மடிக் கணணி, அரசாங்க முத்திரைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.

மட்டுமின்றி மோனிகா என்ற பெயரில் பெண்கள் உடை அணிந்து அவினாஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பாலியல் வீடியோக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad