யாழில் சிங்கள யுவதிகளுடன் ஒரே நேரத்தில் படுத்துப் புரண்ட புருசன் மனைவியிடம் மாட்டினார்

மனைவியும் பிள்ளைகளும் கொழும்பு சென்ற போது ஒரே நேரத்தில் இரு சிங்கள யுவதிகளுடன் தனது வீட்டில் படுத்துப் புரண்ட பிரபல வர்த்தகர் மனைவியிடம் அகப்பட்டுள்ளார்.

 இதனால் இருவருக்கும் இடையில் கடும் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதுடன் விவாகரத்து வரை சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த முதலாளிக்கு 17 வயதில் பெண் பிள்ளை ஒன்று உட்பட 3 பிள்ளைகள் இருப்பதாகவும் இந்த சண்டையால் அவர்கள் மனச்சோர்வுற்றுள்ளனர் என அக்கடை ஊழியகள் ஊடாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மனைவியின் நெருங்கிய உறவினர் கொழும்பில் இறந்த போது அங்கு மனைவியும் பிள்ளைகளும் சென்று 3 நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அந் நேரத்தில் குறித்த வர்த்தகரும் கொழும்பு சென்று மரணவீட்டில் கலந்து கொண்டுவிட்டு அங்கு தங்கி நில்லாது அவசரமாக யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார். அதன் பின்னர் தனது திருகுதாளத்தை வெளிக்காட்டியுள்ளார் குறித்த வர்த்தகர்.

வெளிநாடுகளுக்கான விமான ரிக்கட் விற்பனை செய்யும் கொழும்பு அலுவலகத்தில் வேலைசெய்யும் சிங்களப் பெரும்பாண்மை யுவதிகள் இருவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து குறித்த வர்த்தகர் இரு நாட்கள் இரவிரவாக கூத்தடித்துள்ளார். இதன் போது தனது வீட்டில் தொழிற்படும் சீ.சீ.ரி. கமராவின் தொழிற்பாட்டையும் நிறுத்திவிட்டே இரு நாட்களும் வர்த்தகர் கூத்தடித்துள்ளார், இது தொடர்பாக வர்த்தகர் வீட்டுக்கு அயலில் உள்ள வர்த்தகரின் நண்பி வர்த்தகரின் மனைவிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது பிள்ளைகளை கொழும்பில் வி்ட்டுவிட்டு தனியாக வாகனம் ஒன்று ஒழுங்கு செய்து யாழ்ப்பாணத்துக்கு நள்ளிரவே வந்துள்ளார். தனது வீட்டுக்கு வந்து வீட்டு வாசலில் நின்று வர்த்தகரைக் கூப்பிட்ட போதும் வர்த்தகரும் குறித்த சிங்கள யுவதிகளும் கடும் மது போதையில் படுத்திருந்ததால் கதவைத் திறக்கவே இல்லை எனத் தெரியவருகின்றது. தனது அயல்வீட்டு நண்பி மற்றும் அயலவர்களின் துணையுடன் வெளிக்கதவைத் திறந்து வீட்டு வாசலுக்குச் சென்ற மனைவி வீட்டு கதவை உடைக்க முற்பட்டுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றதால் உள்ளே இருந்த வர்த்தகர் ‘திருடன் திருடன்‘ கத்திக் கொண்டு கதவைத் திறக்கவில்லையாம்.

மனைவி தன்னை அடையாளப்படுத்தியும் கதவைத்திறக்காத வர்த்தகர் ‘பொலிசிடம் கள்ளர் என்று சொல்லிவிட்டேன், அவங்கள் உடனே வரப்போறாங்கள், நீ இங்கே இருந்து ஓடிப்போய் எங்காவது நின்றுவிட்டு விடிய வா‘ என மனைவிக்கே அட்வைஸ் சொல்லியுள்ளார்,

இருந்தும் விடாப்பிடியாக அங்கே நின்று கதவைத்திறக்க முயற்சித்த மனைவியின் முயற்சியைக் கண்டு அச்சமடைந்த வர்த்தகர் வீட்டிக் கதவைத் திறந்துள்ளார்.

வீட்டின் உள்ளே மனைவியும் அயலவர்களும் தேடுதல் நடாத்திய போது சமையலறையின் அலுமாரிக்குள் ஒரு யுவதியும், குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் இன்னொரு யுவதியும் பிடிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகர் மற்றும் இருயுவதிகளும் கடும் போதையுடன் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அந்த இடத்திலேயே மனைவி வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் குறித்த யுவதிகளையும் நையப்புடைத்துள்ளார். இருந்தும் குறித்த யுவதிகளை மனைவி தாக்குவதை தடுத்த வர்த்தகர் அந்த யுவதிகள் தனது சிங்கள நண்பனின் மகள்கள் எனவும் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு தன்னிடம் தனது நண்பன் அனுப்பியதாகவும் மீண்டும் பொய் கூறியுள்ளார். இருந்தும் மனைவியின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது இரு யுவதிகளும் அரை குறை ஆடைகளுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடியுள்ளனர்.

அதிகாலை 4 மணி வரை வீதியில் அரை குறை ஆடையுடன் நின்ற யுவதிகளை அயலவர்கள் அழைத்து வர்த்தகரின் வீட்டுக்குள் இருந்த அவர்களின் பொருட்களை கொடுத்து அவர்களை ஆட்டோ ஒன்றில் அனுப்பியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து தொடங்கிய சண்டை இன்னும் முடியவில்லை என தெரியவருகி்னறது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad