திருக்கைவால் அடியும், பச்சை மட்டையாலும் வெளுத்துவாங்கினால் சரிவரும்.

யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைத்துவரும் ரவுடிக் கும்பல், அல்லது ஒட்டுக்குழுக்களுக்கு அவசியமாக பழைய மருத்துவ முறையினை கையில் எடுப்பது சிறந்தது போல தோன்றுகிறது.

2009ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் சினிமா போல, ஒருவகையான பதற்ற நிலையினை வடக்கில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிலை நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியாக வளர்ந்து இன்று பெரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

தங்கள் தேவைக்காக ஆயுதக் குழுக்களை உருவாக்கியவர்கள் யார்..? என்று வெளிப்படையாகத் தெரியும். அவர்களின் தேவை முடிந்த பின்னர் இவர்களை வெளியில் விட்டுவிட்டார்கள்.

இன்று தங்கள் சொந்தப் பிரச்சினை, வாய்க்கால் தகராறு என்று எடுத்ததுக்கு எல்லாம் வாளெடுத்து வருகிறார்கள் இளைஞர்கள் என்று ஆதங்கப்பட்டார் பெரியவர் ஒருவர்.

அவரின் ஆதங்கத்தோடு ஒரு விடயத்தினையும் சொல்ல மறக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சமூக விரோதச் செயல்கள் பெரும்பாலும் இருந்ததில்லை.

அதற்கு காரணமும் இருந்தது. யாரேனும் சமூக விரோதச் செயலிலோ, அன்றி, பெண்களுக்கு, மாணவர்களுக்கு தொந்தரவு கொடுப்பார்களாயின் அவர்களுக்கு பச்சை மட்டை அடிகொடுப்பார்கள்.

அத்தோடு சமூகத்தை குழப்ப நினைப்பவர்கள் திருந்துவார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

ஆனால், விடுதலைப்புலிகளின் இடைவெளியோடு இன்றைய தலைமுறையினர் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து நம்மோடு பேசிய அவர், அடியாத மாடு படியாது எண்டொரு பழமொழி இருக்கு. அதை எங்கட பெடியளுக்கு நல்லாத்தான் ஒப்புமைப்படுத்தி பார்க்க முடிகிறது.

சரியான கட்டமைப்பின் கீழோ, சரியான வழிகாட்டலின்படியோ இவர்கள் வளர்ந்திருப்பார்களாயின் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள்.

செய்யும் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று அஞ்சியிருப்பார்களாயின் கிஞ்சித்தும், ஆபத்தான ஆயுதங்களை தூக்கப் பயப்பட்டிருப்பார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்களின் மனதில் நாம் எப்படி குற்றம் செய்தாலும் அதில் இருந்து தப்பித்து வெளியே வந்துவிடலாம் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்.

அதற்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் முழு ஆதரவையும் வடக்கில் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், துணிந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

இவர்களை அடக்க வேண்டுமென்றால், திருக்கைவால் அடியும், பச்சை மட்டையாலும் வெளுத்துவாங்கினால் சரிவரும். இவர்களுக்குத் தேவையான மருந்து விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கின்றன.

ஆனால், வாளினை இன்று கையில் எடுத்தவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வாள் எடுத்தவன் வாளினால் தான் மடிவான். இளம் கன்று பயமறியாது.

ஆனால், பொறுப்பு அறிந்து செயற்படவேண்டும். இன்று தங்கள் தேவைக்காக உருவாக்கியவர்கள் நாளை உங்களை அழித்துவிடுவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள் வாள்வெட்டு இளைஞர்களே…!
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad