இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி:மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் !

கொரோனாவினால் உயிரிழந்ததாக அடக்கம் பண்ணப்பட்ட முதியவர் 15 நாட்கள் கழித்து உயிருடன் நடந்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ஜங்கய்யபேட்டையை சேர்ந்தவர் முக்தியால கிரிஜம்மா (71). இவருக்கு கடந்த மாதம் 12ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், விஜயவாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மூன்று நாட்களில் கிரிஜம்மா உயிரிழந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினரிடம் உடலைக் கொடுத்துள்ளனர்.

உறவினர்களும் கையில் கொடுக்கப்பட்ட உடலை கிறிஸ்தவ முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்துள்ளதோடு, இறப்பு சான்றிதழும் குடும்பத்தினரும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிஜம்மாவின் மகன் ரமேஷ் (45) தெலுங்கானா மாநிலம் கம்மம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முக்தியால கிரிஜம்மாவிற்கும், அவரது மகன் ரமேஷிற்கும் பிரார்த்தனை கூட்டம் அவர்களது வீட்டில் நடைபெற்ற போது, கிரிஜம்மா வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

விஜயவாடா அரசு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்ததாக கூறினார். இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நிலையில் உயிருடன் முக்தியால கிரிஜம்மா வீட்டிற்கு வந்ததை பார்த்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து விசாரணை செய்தபோது விஜயவாடா அரசு மருத்துவமனையில் முக்தியால கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போதே அவர் இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை வழங்கியுள்ளனர். அவரது முகமும் முக்தியால கிரிஜம்மாவை போல் இருந்ததால் உறவினர்கள் அடக்கம் செய்தது தெரிய வந்தது.

மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக முக்தியால கிரிஜம்மா இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை உறவினர்களுக்கு வழங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 






Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad