விவாகரத்து செய்த மனைவி-பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!

 


பெண்ணின் முன்னாள் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் ரேகா ரத்தோர்(35) என்ற பெண் தன்னுடைய கணவர் சுனில் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண், கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்ததோடு, அப்பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தியும் வந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் கணவர் வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்துள்ளார். சுனில் தன்னுடைய மனைவியை டைவர்ஸ் செய்துள்ள நிலையில், அடிக்கடி சென்று தகராறு செய்தும் வந்துள்ளார்.

சம்பவத்தன்று ரேகாவிற்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், மனைவி ரேகா மற்றும் மூன்று குழந்தைளுடன் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கூறிய பின்பு, சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பிறகு இந்த கொலை பற்றி துப்பு துலக்கியபோது அவரின் முன்னாள் கணவர் குடும்ப தகராறில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுள்ளதாக சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர் .

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad