தடுப்பூசி வழங்கலில் வடக்கு மாகாணம் முற்றாக புறக்கணிப்பு!



 சீனாவின் மற்றுமொரு Sinopharm தடுப்பூசி தொகுதி இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் தடுப்பூசிகளை 12 மாவட்டங்களுக்கு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் அம்பாறை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் புத்தளம் மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் பதுளை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள் குருநாகல் மாவட்டத்திற்கு 400,000 தடுப்பூசிகள் காலி மாவட்டத்திற்கு 275,000 தடுப்பூசிகள் மாத்தறை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள் பொலனறுவை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் மொனராகலை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 125,000 தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இதுவரையில் 91 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad