யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்-இளைஞனை கடத்தி சித்திரவதை!

 


யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் இளைஞர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

வீதியால் சென்று கொண்டிருந்த தன்னை மதுபோதையில் வந்த பொலிஸார் வாகனத்தில் கடத்தி சென்று , தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் வீதியால் சென்று கொண்டிருந்த போது மது போதையில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடத்தி சென்று வாகனத்தினுள் வைத்து கைத்துப்பாக்கியால் தாக்கி சில கிலோ மீற்றர் தூரம் கொண்டு சென்று வீதியில் வீசி விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கோப்பாய் பொலிஸாரினால் மனிதவுரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நான்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு, பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விளக்கங்கள் கோரப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் , கோப்பாய் பொலிசாரின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad