மீண்டும் மீண்டுமா….? வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை… நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் உன்….!!!

வடகொரியா அடிக்கடி, அணு ஆயுதங்ளை கொண்டும் செல்லும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரத்தில் இருக்கக்கூடிய இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்திருந்தது.

மேலும், நேற்று வட கொரியா, ஏவுகணை பரிசோதனை செய்ததாக, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் கூறியிருக்கிறது. ஆனால், இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை, வெற்றிகரமாக முடிந்ததாக வடகொரியா இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து, வடகொரியாவின் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலில், 1000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை மலைப்பகுதியில் வெற்றிகரமாக முடிந்தது என்று கூறப்பட்டிருக்கிறது. அதை, அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad