யாழில் ஊசியால் போதைப் பொருளை செலுத்திய 20 வயது இளைஞன் மரணம்..!

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட 20 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது.

இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad