சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு நுழைய முயன்ற சஜந்தன் பலி!!

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இளைஞனின் கதி குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்.

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.