கனடாவில் இருந்து வெளியேற்றப்படும் 28,000 புகலிட கோரிக்கையாளர்கள்.

கனேடிய விமான நிலையங்களில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது.

Montreal Trudeau மற்றும் Toronto Pearson விமான நிலையங்களில் அதிகளவான வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ள பல தமிழர்கள் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

72,000 பேர் அகதிகள் கோரிக்கை
அந்தவகையில் 2019 முதல் 2023 வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது கடந்த ஐந்தாண்டு காலத்தில் கனடாவில் பதிவான அகதிகள் கோரிக்கைகளில் 18 சதவீதத்திற்கு இணையானதாகும்.

அதேவேளை அண்மைய தரவுகளின்படி தமிழர்கள் உட்பட 28,000க்கும் அதிகமானவர்களின் புகலிடம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு கடத்தப்படவுள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரம் தெரிவித்துள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad