யாழ் மீசாலையில் சொகுசு பஸ் மோதி ஒருவர் மரணம்.

A9 வீதி யாழ் மீசாலைப்பகுதியில் இபோச சபை பேரூந்தை சொகுசு பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வீதியில் இளவயதான ஆணொருவரை மோதிய பின்னர், பேருந்து தொடர்ந்து பயணித்தது. எனினும், பொலிசாரால் விரட்டிச் செல்லப்பட்டு பேருந்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியை சேர்ந்தவர். அவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து மோதியது. அவர் ஏற்கெனவே கால் ஒன்றை இழந்தவர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad