புருசன் பிரான்சில்!! யாழில் பெண் விதானை 6 வயது குறைந்த இளைஞனுடன் காதல் லீலை!!

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் பெண் விதானை ஒருவரின் காதல் அலையில் அள்ளுண்டு சென்ற இளைஞன் கடும் காயங்களுடன் ஒருவன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தென்மராட்சி பிரதேசசெயலகம் ஒன்றில் குடும்பப் பெண் ஒருவர் விதானையாக வேலை செய்து வருகின்றார். குறித்த பெண் விதானையின் புருசன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், அயலில் வசித்து வந்த தன்னை விட 6 வயது குறைந்த இளைஞனுடன் குறித்த பெண் விதானை தனது லீலைகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வந்துள்ளார். அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிளில் இருந்து பல பரிசுப் பொருட்களையும் பெண் விதானையார் தனது பணச் செலவிலேயே கொடுத்துள்ளதாக இளைஞனின் நண்பர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக தனது வீட்டிலேயே குறித்த இளைஞனை ”தம்பி” என்ற போர்வையில் அனுமதித்து தனது காதல் லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார். குறித்த பெண் விதானையின் வீட்டின் அருகிலேயே அவளது தாய் மற்றும் சகோதரியின் வீடும் உள்ளது. பெண் விதானையின் வீட்டில் குறித்த இளைஞன் தொடர்ச்சியாக வந்து நிற்பது பெண் விதானையின் தங்கையின் கணவனுக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞனை கையும் களவுமாக லீலைகள் செய்து கொண்டிருக்கும் போது பிடிப்பதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார் பெண் விதானையின் சகோதரியின் புருசன். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் விதானையின் வீட்டினுள் புகுந்து சிறிது நேரத்தில் அதிரடியாக அங்கு நுளைந்துள்ளார் தங்கையின் கணவன். விதானை மற்றும் இளைஞனின் நிலைகளை நேரில் பார்த்து பொருமிய தங்கையின் கணவர் இளைஞன் மீது தாக்குதலை தொடுத்ததுடன் துனைக்கு தனது மனைவி மற்றும் மாமியாரையும் அழைத்துள்ளார். இவர்கள் மூவராலும் இளைஞன் பிழிந்தெடுக்கப்பட்டுள்ளான்.

கடும் காயங்களுடன் இளைஞனை அயலவர்கள் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். குறித்த பெண் விதானையும் தனது மச்சானின் வயித்தெரிச்சலால் தங்கள் இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பு அயலவர்கள் முன் வெளிப்பட்டுவிட்டது. கணவருக்கு தகவல் சென்று விடும் என்ற அதிர்ச்சியில் நின்ற போது மச்சானே அதற்கான வழியையும் சொல்லிக் கொடுத்துள்ளார்.

“என்னை விட வயதில் சிறியவன், தம்பி என்று நினைத்து அவனுடன் பழகினால் அவன் என்னை கையை பிடித்து இழுத்து கற்பழிக்க பார்த்திட்டான்,.. என அயலவர்களுக்கு கூறிவிட்டு ஓடிப் போய் ஆசுப்பத்திரியில் போய் படு… நான் உன்ர மனுசனுக்கு போன் பண்ணி சொல்லுறன்..” என கூறி பெண் விதானையையும் ஆசுப்பத்திரியில் படுக்க அனுப்பியதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதே வேளை உன்ர மனிசியின் பத்தினித்தனத்தை பார்த்தியோ…. தன்னோட சேட்டை விட்ட பக்கத்து வீட்டுப் பெடியனிட கையை அடிச்சு ஒடிச்சிட்டாள்” என பிரான்சில் உள்ள பெண் விதானையின் அப்பாவிக் கணவனுக்கு தங்கையின் கணவனான சகலன் கூறியுள்ளாராம்….

19ம் திகதி இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிசார் ஆரம்பிக்கவுள்ளார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad