15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.

 15 வயது சிறுமியை பாலியல் விற்பனையில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளி போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் சிஐடி தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

கொழும்பு மேலதிக நீதிவானிடம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் நேற்று (29) தகவல் அளித்தது.

15 வயது சிறுமியை இணையம் மூலம் விற்பனை செய்து, பெரும் பாலியல் வலையமைப்பை நடத்தி வந்த ஒருவர் அண்மையில் மவுண்ட் லவனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய 40 இற்கும் அதிகமானவர்கள் கைதாகியமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தின் பிரதான சந்தேகநபரின் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை பதிவு செய்து, இணையத்தில் பல்வேறு நபர்களுக்கு வீடியோவை விற்றதாக புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தினர்.

பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்கான நேரம் செலுத்தப்பட்ட தொகையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்றும், 5-10 நிமிடங்கள் பார்க்க அனுமதித்ததற்காக ரூ. 5,000-8,000 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய யாராவது கைதாகாமல் இருக்கிறார்களா என நீதிமன்றம் வினவியது.

தொலைப்பேசிபகுப்பாய்வு நடப்பதாகவும், மேலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமியின் பாலியல் விளம்பரங்களை வெளியிட்ட லங்கா அட் உள்ளிட்ட சில இணையங்ளை தடைசெய்தும் உத்தரவிட்டார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad