இஷாலினி மரணம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள்!

 


முன்னாள் ரிசாத் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், எரிகாயங்களுடன் மரணமடைந்த தலவாக்கலை- டகயமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி தொடர்பிலான வழக்கு, நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, இந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டார்.

பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு அச்சிறுமி, ரிஷாட்டின் அறிவுறுத்தலுக்கு அமையவே சேர்த்துகொள்ளப்பட்டுள்ளார். ஆகையால், அவரையும் (ரிஷாட்டை) சந்தேக நபராக பெயர் குறிப்பிட்டுள்ளேன் என்றார் பிரதி சொலிஸிட்டர்.

குறித்த சிறுமி மீது ஜூலை 3ஆம் திகதி மாலை 6.45க்கு தீப்பற்றிக்கொண்டது எனினும், காலை 8.30க்கே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இரண்டு மணிநேரம் சிகிச்சையளிக்காமை சந்தேகம். அத்துடன் வீட்டிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 11 நிமிடங்களில் பயணிக்கலாம். 2 மணிநேரம் தாமதித்தது ஏன்? பௌத்தலோக்க மாவத்தையில் ரிஷாட் பதியுதீனுக்கு இரண்டு வீடுகள் உள்ளன, சாரதிகள் இருவரும் அந்நேரத்தில் இருந்துள்ளனர். வாகனங்கள் இரண்டும் வீட்டில் இருந்துள்ளன. அப்படியாயின் 2 மணி​​நேரம் தாமதித்த ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. ரிஷாட்டின் மாமாவே சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இதன்போது அவர் பெயர், வயது உள்ளிட்ட சகல விபரங்களையும் போலியாக கொடுத்துள்ளமை பெரும் சந்தேகம். மண்ணெண்ணெய் போன்ற திரவியம் அடங்கிய ப்ளாஸ்டிக் போத்தல் ஒன்றும் தலையணைக்கு கீழிருந்து ​மஞ்சள் நிற லைட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கு முன்னர் பணியாற்றியவர்களின் வாக்குமூலங்களில் பிரகாரம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்ணெண்ணை, லைட்டர் அந்த வீட்டில் பயன்படுத்தவில்லை, தீ அவசியமாயின் சமையலறைக்குச் சென்று கேஸ் அடுப்பிலே​யே பற்றவைப்பதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பணியாற்றிய சாரதியே இன்றைக்கு ஒன்றைரை வருடங்களுக்கு முன்னர், மண்ணெண்​​ணெய் கொண்டுவந்தார் என அமைச்சரின் மாமி கூறியுள்ளார். ஆனால், தான் அப்படி எதனையும் வாங்கி வரவில்லையென அந்த சாரதி வாக்குமூலமளித்துள்ளார்.

அம்புலன்ஸ் வரும் வரையிலும் வீட்டின் முன்பாக உள்ள நீர்த்தொட்டியில் இரண்டு மணிநேரம் சிறுமியை அமிழ்த்தி வைத்திருந்துள்ளனர். அமைச்சரின் வீட்டில் வாகனம் இல்லையா? என கேள்வி எழுப்பப்ப்டாதுடன், சிறுமியின் பெயரை இஷனி என்ற சிங்கள பெயராகவும் வயதை 18 ஆகவும் மாற்றி கொடுத்துள்ளமை ஏன்? வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்தும் சிறுமியை பார்க்கமுடியவில்லை, ரிஷாட்டின் வீட்டுக்குச் செல்கின்றனர்.

ஆனால் அங்கு, பொலிஸ் சீருடையில் இருந்த ஒருவர், “பொலிஸூக்கு ​போக வேண்டியதில்லை, இவ்விடத்திலேயே முடித்துகொள்வோம்” சிறுமியின் சகோதரனிடம் ​தெரிவித்துள்ளார். அத்துடன் ரிஷாட்டின் செயலாளர் எனக் கூறப்படுபவர், மலர்சாலையில் வேலைச் செய்பவர் என தன்னை அறிமுகப்படுத்தி, சிறுமியின் சகோதரனிடம் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய தங்கை எரியுண்டதாகக் கூறப்படும் அந்த அறையை சகோதரன் பார்த்தபோது, மண்ணெண்ணெய் போத்தல் கதவுக்கு அருகில் இருந்துள்ளது. பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போகும் போது, அந்தப் போத்தல் கட்டிலின் மேல் இருந்துள்ளது. “சொக்கோ” அதிகாரிகள் (பொலிஸ் தடயவியல் அதிகாரிகள்) செல்கையில், அதே போத்தல் நாற்காலியின் மேல் இருந்துள்ளது.

இதேவேளை ரிஷாட் பதியூதீனின் வீட்டில்எட்டு சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அதிகாலை 6.30 முதல் பொருத்தப்பட்டிருந்த 6 கெமராக்கள் செயலிழந்துள்ளமையும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரிக்ஷாட் வீட்டிலுள்ள 8 சி.சி.ரி.வி கமெராக்களில் ஏப்ரல் மாதம் முதல் பதிவுகளை பெறுவதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது.

மேலும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், சாட்சிகளை அவர்கள் அச்சுறுத்த கூடும் என்பதனால், அவர்களுக்கு பிணை வழங்கவேண்டாமென பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு இதன்போது கொண்டுவந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad