பிரித்தானியாவில் தொடர்ந்து வெடித்து சிதறிய வீடுகள் -வெடிப்பின் மர்மம்...

பிரித்தானியாவில் இன்று நடந்த பயங்கர வெடிப்பு விபத்தில் 2 வீடுகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் முக்கிய நகரான மான்செஸ்டரின் Blackley என்ற இடத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த வீடும் அருகில் இருந்த மற்றொரு வீடும் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 3 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிசாரும், மீட்பு படையினரும் அழைக்கப்பட்டு தீவிரமாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad