பளையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

இன்று காலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பொல்காவலை பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய கோசல என்பவர் உயிரிழந்துள்ளார்.

அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்து பளை வைத்தயசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad